அக்கறைப்பற்றில் போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

Sri Lanka Police Eastern Province
By Rakshana MA Oct 20, 2024 07:06 AM GMT
Rakshana MA

Rakshana MA

5000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் அக்கரைப்பற்று - பாலமுனை பிரதேசத்தில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கறைப்பற்று பொலிஸாரினால் நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதிச் சோதனையின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கார் ஒன்றை சோனைக்கு உட்படுத்திய போது குறித்த காரிலிருந்து போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், காரினுள் இருந்த இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விமானம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்ட விமானம்

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 34, 43 மற்றும் 46 வயதுடைய மட்டக்களப்பு மற்றும் களுவாஞ்சிக்குடி பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

அக்கறைப்பற்றில் போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது | Three Suspects Arrested With Fake Currency At Akp

கைதானவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

இலங்கை வாழ் எரிபொருள் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

இலங்கை வாழ் எரிபொருள் பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW