ஓட்டமாவடி விபத்தில் மூவரின் நிலைமை
Batticaloa
Trincomalee
Sri Lanka
Accident
By Rakshana MA
வாழைச்சேனை - ஓட்டமாவடி பிரதேசத்திற்குட்பட்ட பிரதான வீதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்துச் சம்பவமானது நேற்று(03) மாலை ஓட்டமாவடி மீன் சந்தைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
+விசாரணை
ஓட்டமாவடி பிரதான வீதியில் பயணித்த இரு முச்சக்கரவண்டிகள் நேருக்கு நேர் மோதி இவ்வாறு விபத்து நடைபெற்றுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸாரினால் விசாரணைகள் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

