நோன்பை கடைபிடிப்பவர்கள் மறந்தும் செய்யக் கூடாதவை!
ரமழான் நோன்பு கடைபிடிப்பவர்கள் மறந்தும் செய்யக் கூடாதவை குறித்து அறிந்து கொள்வோம்.
ரம்ஜான் எனும் ரமழான் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் முஸ்லிம் மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓர் திருநாளாகும்.
குறிப்பாக ரமழான் மாதம் பிரார்த்தனை, நோன்பு, பிரதிபலிப்பு, ஈகை ஆகியவற்றை வெளிப்படுத்தும் மாதமாகும். இஸ்லாமியப் புனித மாதமான ரமழான் இம்மாதம் ஆரம்பமானது. அத்துடன், ஈகைத் திருநாள் (Eid al-Fitr) இம்மாதம் 21ஆம் திகதி வருகின்றது.
ஒரு மாதம் நோன்பு
இஸ்லாமிய நாட்காட்டியின் 9ஆவது மாதமான ரமழான் மாதத்தில், குர்ஆன் வானத்திலிருந்து பூமிக்கு வந்ததாக நம்பப்படுகிறது. இந்த மாதத்தில் இருக்கும் நோன்பை மரியாதைக்குரிய அடையாளமாக இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கின்றனர்.
மக்கள் தங்கள் ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கருணையைப் பெற இந்த மாதத்தில் நோன்பு நோற்பார்கள்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு இந்த பண்டிகை மிகவும் புனிதமானது. இந்த மாதத்தில் அசுத்த எண்ணங்களில் விலகி நல்லெண்ணங்களில் மனதைச் செலுத்த வேண்டும். தினமும் சூரிய உதயத்திற்கு முன்பு ஆரம்பித்து சூரிய அஸ்தமனம் வரை ஒரு மாதம் நோன்பு வைப்பார்கள்.
உண்ணாவிரதம் இருப்பது மிகவும் கடினம்
சூரிய உதயத்திற்கு முன் உட்கொள்ளும் உணவை சஹர் எனவும், சூரிய அஸ்தமனத்திற்குப் பின் உட்கொள்ளும் உணவை இஃப்தார் எனவும் கூறுகிறார்கள். பலர் பாரம்பரிய வழக்கப்படி பேரீச்சம்பழத்தை உண்டு நோன்பை முடிப்பார்கள்.
நாள் முழுவதும் உணவு இல்லாமல் நீண்ட காலத்திற்கு இருக்க இந்த சஹர் எனும் அதிகாலை உணவு தான் ஊட்டமளிக்கிறது. மாலையில் இரவு உணவுடன் நோன்பு முறிக்கப்படுகிறது. இதை இப்தார் என்று அழைக்கிறார்கள்.
ஆனால், பலருக்கும் நீண்ட நேரம் உண்ணாவிரதம் இருப்பது மிகவும் கடினம். அதனால்தான் உடலுக்குத் தேவையான சத்துக்களைப் பெற ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.
தாகத்தை உண்டாக்கும்
ரமழான் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் வருகிறது. ஆகவே தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரி, தக்காளி மாதிரியான நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
இது உங்கள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். தாகத்தை உண்டாக்கும் வறுத்த, உப்பு நிறைந்த உணவுகளை உண்ணாதீர்கள்.
செய்யக் கூடாதவை..!
•பகலில் நோன்பு இருப்பவர்கள் அனைவரும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
• நோயால் அவதிப்படுபவர்கள், தாய்ப்பாலூட்டும் பெண்கள், பயணிகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், மாதவிடாய் உள்ளவர்கள் நோன்பு இருக்கக்கூடாது.
•ஈத் தினத்தன்று புதிய ஆடைகள் அணிந்து, நமாஸ் செய்து, சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு ஒன்றாகச் சாப்பிட்டு, 'ரம்ஜான் முபாரக்' வாழ்த்துக் கூறி இந்தப் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.