திருடர்களின் சதி முறியடிக்கப்படும்! சஜித்

Ranil Wickremesinghe Sajith Premadasa Samagi Jana Balawegaya
By Mayuri Jul 08, 2024 11:29 AM GMT
Mayuri

Mayuri

தமக்கு திருடர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை எனவும், திருடர்களின் சதிகள் முறியடிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கம்பஹாவில் நேற்று (07.07.2024) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அரசமைப்பில் உள்ள ஓட்டைகளை ஆராய்வதைத் தற்போதைய ஜனாதிபதியின் சீடர்கள் கடமையாகக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.

ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை என்பது கிடையாது

தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை என்பது கிடையாது. அவர் திருடர்களைப் பாதுகாக்கும் பணிகளையே முன்னெடுத்துள்ளார்.

திருடர்களின் சதி முறியடிக்கப்படும்! சஜித் | Thieves Plot Will Be Foiled Sajith

சிலருக்கு அதிகாரம் இல்லாமல் உறக்கம் வருவதில்லை. அவ்வாறானவர்கள் பல சதிகளை முன்னெடுத்து ஆட்சியைத் தக்க வைக்க முயல்கின்றனர்.

ஐக்கிய மக்கள் சக்திக்கு அவ்வாறான எந்தத் தேவையும் இல்லை. எமக்குத் திருடர்களுடன் எந்தக் கொடுக்கல் வாங்கலும் இல்லை. மக்களின் சக்தியே எமது பலம். திருடர்களின் சதிகள் முறியடிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW