சீதனம் ஏற்படுத்தும் சீரழிவுகள் பல!

Sri Lanka
By Nafeel May 05, 2023 10:01 AM GMT
Nafeel

Nafeel

Mahir Mohideen


அவற்றுள் சில முக்கிவிடயங்களை தொட்டுக்காட்டி அது தொடர்பான பார்வையை பகிர விரும்புகிறேன்!

1.பெண்பிள்ளையை பெற்றெடுத்த பெற்றோர்கள் சுமையான கருதும் திருமணமும் சீரழியும் முஸ்லிம் குடும்பங்களும்!

2.ஆயுள் முழுவதும் ஹறாம் ஹலால் பார்காது பொருளீட்டியும் குமரைக் கரைசேர்கவில்லையே என ஏங்கித் தவிக்கும் பெற்றோர்கள்!

3.ஆத்மீக வலுவுட்டி வளர்த்தும் பயன்தான் என்ன எனக் குமுறுகின்ற ஆத்மீகவாதிகள்!

4.பெற்றோர்கள் சொத்துக்களைத் தேடியும் ஊரவன் கொள்ளையடிக்கான் எனத் துடிக்கும் மகன்மார்கள்!

5.இம்மை மறுமைக்கு ஈடேற்றம் சேர்க்கவில்லையே என அங்கலாய்கும் பெற்றோர்கள்! தொழுகையில்லை நோன்பு இல்லை ஹஜ்ஜூ செய்ய முடியவில்லை இவ்வாறு ஏக்கங்கள் ... மறணப்படுக்கைவரை நீண்டுசெல்லும் துர்பாக்கிய நிலை!

இத்தனைக்கும் வழிவகுத்தது இஸ்லாமிய வழிமுறைக்கப்பால் வளக்காறு மற்றும் சம்பிரதாயம் எனும் பெயரில் நடக்கும் கொடுமை! இதனை இல்லாதொழிக்க வழிஎன்ன?

தனிமனிதன் சுயமாக முடிவெடுத்து முன்வந்து இஸ்லாம் கூறுகின்றபடி தனது இல்லற வாழ்வை தொடங்க முற்படும் இளைஞனுக்கு பெற்றோர் கொடுக்கும் தொல்லை ஒருபுறம்இ இருக்க உறவுகள் அயலவர்கள் அடிக்கும் நக்கல் அவனது தைரியத்தை ஆட்டம் காண வைப்பதுடன் மனசையும் சுக்குநூறாக்கிவிட துவண்டுபோன நிலையில் வாழ்வை துவங்க வேண்டியுள்ளது!

அவ்வாறாயின் வழிதான் என்ன? சமூகத்தின் வழக்காறுகளைச் சவாலாக மாற்றியமைக்கும் இளைஞர் தலைமுறை துணிகரமாக சமூகத்தில் புரையோடிப்போயுள்ள வழக்காறை மாற்ற முற்படவேண்டும்!

அவர்களுக்கு சிறுவயது முதலே இன்றைய இளம் பெற்றோர்கள் அதனை ஊட்டுவதுடன் தனது பிள்ளை இஸ்லாம் கூறுகின்றபடியான திருமண முறையில்தான் (மகர் கொடுத்து மணமகளுக்குரிய வாழ்விடம் மற்றும் வசதி செய்துதான்) மணமுடிப்பான். அதற்காக நான் என்னை மாற்றுவதுடன் அதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்தி கொடுப்பேன் என திடசங்கற்பம் பூணவேண்டும்!

கற்ற இளைஞர்கள் உயர்பதவி வகிக்கும் இளைஞர்கள் இதன் யதார்த்தத்தை உணர்ந்து சமூக மாற்றத்தில் தன்னை அர்பணித்து எதிர்கால சந்ததிக்கு இல்வாழ்வை இலகுவாக்க வழிசமைப்பேன என துணிகரமான முடிவுகளை எடுப்பதுடன் பெற்றோர்களை ஒருவாறு சமாளித்து தனக்குள்ள சவாலை வெல்வதற்கு முன்வரவேண்டும்!

இன்ஷா அல்லாஹ் மாற்றம் வரும்! மணமுடித்துவைக்கும் பதிவாளர் முதல் மௌலவி வரை தனது கடந்தகால ஜாஹிலிய திருமணத்திற்கு பாவமன்னிப்பு கூறி சமூகத்தினது திருமண சடங்குகளை களைந்து இஸ்லாம் கூறுகின்ற முறைப்படி மணமகனிடம் உணவு உடை உறையுள் போன்றவற்றை சபையோர் சாட்சியா வழங்க தான் முன்வந்துள்ளதாக ஒப்புக் கொள்ள வைத்து அதற்கான ஹதீதையும் குர்ஆன் வசனத்தையும் ஓதி மக்களை உற்சாகப்படுத்தி திருமணங்களை முடித்துவைக்க முன்வரவேண்டும்!

அதில் உள்ள அனைத்து சவால்களையும் அல்லாவுக்காக ஏற்கவேண்டும்! இன்ஷா அல்லாஹ் மாற்றம் வரும்!

இளைஞர்களே சிந்தியுங்கள்! பெற்றேர்களே சம்பிரதாய சடங்குகளை களைந்து வாழ்வை இலகுபடுத்தி உங்கள் பிள்ளைகளது வளமான வாழ்வுக்கு வழிவகுக்க முன்வாருங்கள்! அது முறையான சொத்துப்பங்கீட்டுக்கு உங்களுக்கு வழிவகுக்கும்! ஒரு ஆண் தனது சக்திக்குட்பட்ட நிலையில் தனது வாழ்வை அமைக்க முன்வருவான்!

பொருளீட்டல் அதிகரிக்கும் சமூகம் வளரும்! இம்மை மறுமை வாழ்வு சிறக்கும்! அதற்கு உங்கள் சிறைவாழ்வை கொஞ்சம் யோசித்து மாற்றம் பற்றி யோசியுங்கள்!

ஒரு சமூகம் தன்னைதான் மாற்றிக் கொள்ளாத வரை அல்லாஹ் அந்த சமூகத்தை மாற்ற மாட்டான்! சிந்திப்போம் ஆக்கபல முன்னெடுப்புக்களை எடுப்போம்! இதுகுறித் சிந்தனைகளை பரவலாக்கம் செய்வோம்! இன்ஷா அல்லாஹ் மாற்றம் வரும்!