ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு குறித்து வெளியான தகவல்
Colombo
Sri Lanka
Festival
By Sachi
ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு நாளை (22.03.2023) இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்போர் கூடத்தில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு
இந்நிலையில் கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு உறுப்பினர்கள், கொழும்பு பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள் அகில இலங்கை ஜம்இய்யத்துல உலமா சபையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளவுள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.