காசாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்! இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்களின் அவலநிலை

Palestine World Gaza
By R.rishma Nov 15, 2025 12:30 PM GMT

காசாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக அங்கு பெய்த கன மழையால் காசாவில் இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்களின் கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று இரவு முழுவதும் பெய்த கனமழையால் அவர்களின் கூடாரங்களில் தண்ணீர் நிரம்பி வழிந்ததுள்ளது. தங்குமிடங்கள் மற்றும் உடமைகள் நனைந்து, அவற்றை உலர்த்த வழியின்றி மக்கள் அவதிப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி

காசாவில் உள்ள அதிகாரிகளுக்கு உதவி கோரி நூற்றுக்கணக்கான வேண்டுகோள்கள் வந்துள்ளதாகவும் ஆனால் அவர்களுக்கு வழங்குவதற்கு வளங்கள் இல்லை என்றும் காசா சிவில் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பாசல் தெரிவித்துள்ளார்.

காசாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்! இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்களின் அவலநிலை | The Plight Of Displaced Palestinians

முழு தங்குமிட மையங்களிலும் நீர் மட்டம் 10 சென்டிமீட்டருக்கும் (3.94 அங்குலம்) அதிகமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மக்கள் கூறுகையில்,"மழையால் நாங்களும் எங்கள் சிறு குழந்தைகளும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டோம், எங்கள் கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. மழையிலிருந்து எங்களைப் பாதுகாக்க கூரை இல்லை.

மோசமான நிலை

இந்த ஆண்டு காசாவிற்கு புயல்கள் பொதுவானவை, ஆனால் இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் நிரந்தர தங்குமிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதால், சாதாரண அளவு மழை பெய்தாலும் கூட குடியிருப்பாளர்களை வெள்ளத்தில் மூழ்கடித்து, ஏற்கனவே உள்ள மோசமான நிலைமைகளை மேலும் மோசமாக்கும்.

காசாவில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம்! இடம்பெயர்ந்த பலஸ்தீனியர்களின் அவலநிலை | The Plight Of Displaced Palestinians

மழை காரணமாக அதிகாலை 2:30 மணி முதல் நாங்கள் விழித்திருக்கிறோம். மெத்தைகள் மற்றும் போர்வைகள் எல்லாம் நனைந்துவிட்டது.''என்று கூறியுள்ளனர்.