பணிப்புறக்கணிப்பில் ஆசிரியர்கள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Sri Lanka Sri Lankan Schools Education
By Rukshy Jun 26, 2024 07:21 AM GMT

சுகயீன விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய ரீதியில் ஆசிரியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இரண்டாம் தவணை ஆரம்பமான நிலையில், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையானது மாணவர்களின் கல்வி நிலைக்கு பின்னடைவாக அமையும் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (26) ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களை கொழும்புக்கு வரவழைத்து போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

பணிப்புறக்கணிப்பு 

மேலும், ஆசிரியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக குழந்தைகளின் வரவு விகிதம் குறைவாக காணப்படுவதாக கூறப்படுகிறது.

பணிப்புறக்கணிப்பில் ஆசிரியர்கள்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Teachers Preparing Protest

அத்தோடு, பாடசாலைக்கு வருகைத்தந்துள்ள மாணவர்களும், விளையாட்டு மைதானங்களிலேயே விளையாடி வருவதாக கூறப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW