வரி செலுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு
Sri Lankan Peoples
Income Tax Department
Income Tax Return
By H. A. Roshan
தேசிய வரி வாரத்தினை முன்னிட்டு திருகோணமலையில் "வரி சக்தி" எனும் தலைப்பிலான விழிப்புணர்வொன்று இடம்பெற்றது.
இது திருகோணமலை குளக்கோட்டன் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று (03) நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் தம்புள்ள பிராந்திய காரியாலயம் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முக்கியத்துவமான விடயங்கள்
இதில் வரி செலுத்துவதன் முக்கியத்துவம் வரி செலுத்தத் தவறுவது தண்டணைக்குரிய குற்றமாகும் என பல விடயங்கள் தெளிவூட்டப்பட்டன.
இதில் உள் நாட்டு இறை வரி திணைக்களத்தின் தம்புள்ள பிராந்திய காரியாலய ஆணையாளர் பி.ஜி.லலித் உட்பட வர்த்தகர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


