அதிக கட்டணம் பெற்று பரிசோதனை செய்த ஆய்வகத்திற்கு அபராதம்
நாட்டில் அரசாங்கம் அனுமதித்த கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் பெற்று இரத்த பரிசோதனை செய்த குற்றச்சாட்டில் மருத்துவ ஆய்வகத்திற்கு மஹர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலானது, மல்வானையிலுள்ள தனியார் ஆய்வகம் ஒன்றில் இடம்பெற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக கட்டணம்
நுகர்வோர் விவகார ஆணைய விதிமுறைகளை மீறி, ஒரு நோயாளியிடம் அதிக கட்டணம் வசூலித்ததை ஆய்வகம் ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
இரத்த பரிசோதனைக்கு அரசு அறிவித்த உச்ச கட்டணம் 400 ரூபாய் ஆகும். மருத்துவத் துறையில் கட்டண மீறல்களை கட்டுப்படுத்துவதற்கான தொடர்ச்சியான நடைமுறையாக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த வழக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
