கொழும்பில் தமிழ் மாணவி விபரீத முடிவு!
Colombo
G.C.E.(A/L) Examination
Sri Lanka Police Investigation
Train Crash
Death
By Thahir
கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயில் முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.
யுவதி உயிரை மாய்த்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என வெள்ளவத்தை பொலிஸார் கூறியுள்ளனர்.
கொழும்பு இராமநாதன் பாடசாலை மாணவி
உயிரிழந்த யுவதியின் உடல் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு இராமநாதன் பாடசாலை மாணவி செல்வி சுபகீர்த்தனா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் இன்று மாலை 5 மணியளவில் புகையிரதம் மோதுண்டு இறந்துள்ளார்.
அதேவேளை உயிரிழந்த மாணவி இம் முறை க.பொ.த உயர்தர பரீட்சை எழுதிய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.