உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்: மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி

Batticaloa Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Oct 23, 2024 11:04 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு மாவட்டத்தில் உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் எனும் தொனிப்பொருளில் மக்கள் விழிப்புணர்வு பேரணி ஒன்று கரிடாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை எஸ். எல் ஜெய நிக்சன் அடிகளார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இவ் விழிப்புணர்வு ஊர்வலமானது இன்று (23) பாலமுனை சந்தியிலிருந்து ஆரையம்பதி வைத்தியசாலை வரையில் சென்றுள்ளது.

இலங்கை - இந்திய கப்பல் சேவைக்காக மில்லியன் கணக்கில் நிதி வழங்கும் இந்திய அரசாங்கம்

இலங்கை - இந்திய கப்பல் சேவைக்காக மில்லியன் கணக்கில் நிதி வழங்கும் இந்திய அரசாங்கம்

தலசீமியாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரல்

உயிர் காக்கும் ஒரு பொருள் இரத்தம், இரத்த தானம் செய்ய தயங்க வேண்டாம், உயிரைக் காப்போம் போன்ற பல்வேறுபட்ட பதாகைகளை ஏந்திய வாறு மக்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம்: மட்டக்களப்பில் விழிப்புணர்வு பேரணி | Tala Seemia Awareness Rally In Batticaloa

மேலும் உதிரம் கொடுப்போம் உயிரை காப்போம் எனும் நடைபேரணியானது கரிடாஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் தல சீமியா நோய்க்கு எதிராக செயற்பட முன்னெடுக்கப்பட்ட திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலையில் தோட்டம் ஒன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு

திருகோணமலையில் தோட்டம் ஒன்றிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிப்பு

மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை

மீண்டும் அதிகரிக்கும் தங்க விலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW