கூரிய ஆயுதத்தால் நபரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் சிக்கினார்

Sri Lanka Police Sri Lanka Police Investigation
By Mayuri Jun 30, 2024 05:22 AM GMT
Mayuri

Mayuri

மஹரகம பொதுச் சந்தைக்கு முன்பாக நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹரகம பொதுச்சந்தைக்கு முன்பாக உள்ள நடைபாதையின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (29) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள்

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது ​​அவரிடமிருந்து போதைப்பொருட்கள், கையடக்கத் தொலைபேசி மற்றும் கூரிய ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கூரிய ஆயுதத்தால் நபரொருவர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் சிக்கினார் | Suspect Arrested In Maharagama

கைதான சந்தேக நபர் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW