அம்பாறையில் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

Ampara Sri Lanka Police Investigation Crime
By Laksi Sep 30, 2024 08:54 AM GMT
Laksi

Laksi

அம்பாறையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை(27) வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கல்முனை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில், வரப்பத்தான்சேனை 02 வண்டிக்காரன் வீதி பகுதியை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான 43 வயது மதிக்கத்தக்கவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

கைது

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 5 கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறையில் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது | Suspect Arrested In Ampara

அத்துடன், குறித்த சந்தேக நபர் போதைப்பொருள் நுகர்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த கைது நடவடிக்கையானது விசேட அதிரடிப்படை அதிகாரி கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவர்கள்

வரலாற்றுச் சாதனை படைத்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவர்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW