காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் உயிரிழப்பு

Sri Lanka Police Batticaloa Eastern Province
By Laksi Sep 30, 2024 10:45 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு - காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் காத்தான்குடி - 05, அஹமட் பரீட் மாவத்தையை சேர்ந்த தரம் 11இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மருதமுனை தேர்தல் குழுவுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட சந்திப்பு

மருதமுனை தேர்தல் குழுவுடன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விசேட சந்திப்பு

மேலதிக விசாரணை

தனது நண்பருடன் காத்தான்குடி- 05, அஹமட் பரீட் மாவத்தை வீதி வழியாக பயணித்த வந்த போது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த வீதியில் காணப்பட்ட மின்கம்பம் ஒன்றுடன் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவன் உயிரிழப்பு | Student Died Motorcycle Accident In Kattankudy

இந்த நிலையில், உயிரிழந்த மாணவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அம்பாறையில் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

அம்பாறையில் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது

தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் குறித்து வெளியான தகவல்

தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் அச்சிடும் பணிகள் குறித்து வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW