நாட்டில் அதிகரிக்கும் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பாவனை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாட்டில் தற்போது சந்தையில் கிடைக்கும் ஆபத்து விளைவிக்க கூடிய பல்வேறு கிரீம்கள் மற்றும் லோசன்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தோல் கிரீம்கள் மற்றும் லோசன்களில் ஆபத்தான அளவில் அதிக அளவு கன உலோகங்கள் இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது.
பாதுகாப்பில்லாத கிரீம் வகைகள்
இதனையடுத்து நுகர்வோர் விவகார ஆணையகம், இது தொடர்பில் ஒரு பொது எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அத்துடன் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய தயாரிப்புகளையும், அவற்றின் முத்திரைப் பெயர்களின் பட்டியலையும், அனுமதிக்கப்பட்ட உலோக செறிவுகளைக் கோடிட்டுக் காட்டும் வர்த்தமானியின் நகலையும் அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
எனவே அங்கீகரிக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை மீறும் கிரீம்கள் மற்றும் லோசன்களை வாங்கவோ பயன்படுத்தவோ கூடாது என்று நுகர்வோர் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |