இலங்கை உள்நாட்டு போரின் வரலாற்று ஆவணப் பட வெளியீடு
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் வரலாற்று ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஆவணப்படமானது, நேற்று (17) அம்பாறை மாவட்ட வழிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அக்கரைப்பற்று AWF அமைப்பின் கேட்போர் கூடத்தில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
ஆவணப் பட வெளியீடு
இந்த ஆவணப்படமானது, எழுநா சமூக விழிப்புணர்வு ஆவணப்படுத்தல் குழுமத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், இந்த ஆவணப்படத்தில் யுத்த காலங்களில் மக்கள் எதிர் நோக்கிய இன்னல்கள் தொடர்பிலும், விசேடமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலை தொடர்பிலும் அவர்களது உறவுகளுடைய மனவெளிப்பாடுகள் மற்றும் அவை தொடர்பான சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்களின் கருத்துக்கள் அடங்கியதாக உள்ளது.
இந்த நிகழ்வில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்து நிர்வாகிகள், உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டதோடு, இந்த ஆவண படம் தொடர்பில் தமது கருத்துக்களையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











