கொழும்பில் அவசரமாக ஒன்றுக்கூடவுள்ள அனைத்து கட்சி தலைவர்கள்! விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு

Colombo Sri Lanka Parliament Sri Lanka
By Fathima Apr 15, 2023 11:39 PM GMT
Fathima

Fathima

எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டுக்குப் பிறகு நடைபெறும் முதல் கட்சித் தலைவர்கள் கூட்டம் இதுவாகும். இதன்படி, இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, புத்தாண்டின் பின்னர் முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.

கொழும்பில் அவசரமாக ஒன்றுக்கூடவுள்ள அனைத்து கட்சி தலைவர்கள்! விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு | Srilanka Parliment Members Political Meeting

வன்கொடுமை தடுப்பு சட்டம்

அன்றைய தினம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்றத்தின் நிகழ்ச்சி நிரலில் உரிய சட்டத்தை உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அவசரமாக ஒன்றுக்கூடவுள்ள அனைத்து கட்சி தலைவர்கள்! விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு | Srilanka Parliment Members Political Meeting

எவ்வாறாயினும், இது தொடர்பில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலம் எதிர்வரும் 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும் பல கட்சிகளின் எதிர்ப்பினால் அது சமர்ப்பிக்கப்படவில்லை. சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தினால் சட்டமூலத்தை சமர்பிப்பதை தாமதப்படுத்துமாறும் சில தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.