கட்டாரிலுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
கட்டாரில் தற்போதைய நிலவுள்ள அமைதி குறைபாடுகள் மற்றும் வான்வழி பதற்றங்களை முன்னிட்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் தாங்கள் இருப்பிடங்களில் பாதுகாப்பாக இருக்குமாறு கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன், கட்டார் அரசாங்கம் மற்றும் இலங்கை தூதரகம் இணைந்து வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களையும் கட்டாயமாக பின்பற்றுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தூதரக அறிவிப்பு
எதிர்பாராத அவசரநிலை ஏதேனும் ஏற்பட்டால், +9471182587 என்ற இலங்கை தூதரக அவசர தொலைபேசி எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளுமாறும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கட்டாரில் வசிக்கும் இலங்கையர்கள் அமைதி மற்றும் ஒழுங்கைக்காக்குமாறு தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |