மூன்று உயிர்களைக் காப்பாற்றுங்கள்: ரியாத்தில் இருந்து அவசர வேண்டுகோள்

Sri Lanka United Arab Emirates World
By Vinoja Jun 21, 2026 05:27 PM GMT

சவுதி அரேபியாவின் ரியாத்தில், புற்றுநோயுடன் போராடி வரும் ஒரு இலங்கைத் தாய், ஆவணங்கள் இல்லாத தனது இரண்டு சிறு குழந்தைகளுடன் மிகவும் அவலமான நிலையில் வாழ்ந்து வருகிறார்.

அவர்களின் உடல்நிலையும் வாழ்க்கைச் சூழலும் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றன. பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களின் நடவடிக்கைகள் மிகவும் தாமதமாக நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

மூன்று உயிர்களைக் காப்பாற்றுங்கள்: ரியாத்தில் இருந்து அவசர வேண்டுகோள் | Sri Lankan Mother 2 Kids In Distress In Riyadh

இந்தக் குடும்பத்தின் தற்போதைய நிலைமை காரணமாக, மேலும் தாமதத்தைத் தாங்கிக்கொள்ளும் சூழல் இல்லை.

இந்தச் சம்பவத்திற்கு உரிய கவனம் கிடைக்கவும், தாயும் அவரது குழந்தைகளும் விரைவாகவும் பாதுகாப்பாகவும் தாயகம் திரும்புவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படவும், மனிதாபிமான உணர்வுள்ள அனைவரின் ஆதரவும் குரலும் தேவைப்படுகிறது

உங்கள் ஒத்துழைப்பு 3 உயிர்களைக் காப்பாற்றக்கூடும். தொடர்புகளுக்கு 00966532580719