படகு மூலம் நாட்டுக்கு வந்த போதைப்பொருள் கடத்தல்காரர் கைது

Sri Lanka Sri Lanka Police Investigation India
By Dhayani Aug 11, 2024 02:02 PM GMT
Dhayani

Dhayani

இந்திய கடற்றொழிலாளர் படகு மூலம் புத்தளம் - வென்னப்புவ தல் தேகா (கடவத்தை) கடற்கரைக்கு வந்த இலங்கை நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படை புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய தகவலுக்கு அமைய கடற்படையினரும், பொலிஸாரும் இணைந்து வென்னப்புவ கரையோரப் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய மீன்பிடி கப்பலொன்றில் சட்டவிரோதமான முறையில் வென்னப்புவ கடற்கரைக்கு வந்த நபர் இரகசியமாக தரையிறங்க முற்பட்ட போது கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபான விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை - மதுவரித் திணைக்களம்

மதுபான விலை குறைக்கப்படுவதாக வெளியான தகவலில் உண்மையில்லை - மதுவரித் திணைக்களம்

படகு மூலம் நாட்டுக்கு வந்த போதைப்பொருள் கடத்தல்காரர் கைது | Sri Lankan From Indian Custody Jailed In Wennappu

சட்ட நடவடிக்கைகள்

குறித்த சந்தேகநபர் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் 2021ஆம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் மேலதிக சட்ட நடவடிக்கைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொள்வார்கள் என கடற்படை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரொஷான் ரணசிங்க

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரொஷான் ரணசிங்க


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW