வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு

Climate Change Weather
By Rakshana MA Jun 25, 2025 02:18 AM GMT

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை குறித்து வெளியிட்ட அறிக்கையிலே, மேலுள்ளவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, வடமேற்கு மாகாணத்தில் பல முறை மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மீண்டும் அதிகரிக்கும் முறுகல்: ஈரானுக்கு இஸ்ரேல் விடுத்த கடும் எச்சரிக்கை

மீண்டும் அதிகரிக்கும் முறுகல்: ஈரானுக்கு இஸ்ரேல் விடுத்த கடும் எச்சரிக்கை

காற்றுடன் மழை 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு சுமார் (30-40) கி.மீ வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும்.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு | Sri Lanka Weather Forecast

இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

உலகளாவிய எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உலகளாவிய எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமற்றது..! ஈரான் வெளியிட்ட அதிரடி தகவல்

இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம் சாத்தியமற்றது..! ஈரான் வெளியிட்ட அதிரடி தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW