கடவுச்சீட்டு விநியோகத்தில் மோசடிகள் : அம்பலமான தகவல்கள்

By Rakshana MA Feb 08, 2025 01:00 PM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் புதிதாக கடவுச்சீட்டு பெறுவது மற்றும் புதுப்பித்துக் கொள்வது என்பது பெரும் சவாலான ஒன்றாக மாறியுள்ளது.

இந்நிலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் தற்போது மாதக்கணக்கில் காத்திருந்து அதனை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடவுச்சீட்டு பிரச்சினைக்கு இரண்டு மாதங்களுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் முயன்று வருகிறது.

பாடசாலை மாணவர்களுக்கான கடவுச்சீட்டு விநியோகம்! அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமம்

பாடசாலை மாணவர்களுக்கான கடவுச்சீட்டு விநியோகம்! அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமம்

பெருந்தொகை பணம் 

இந்நிலையில் பெருந்தொகை பணத்தை லஞ்சமாக கொடுத்து அதனை பெற்றுக்கொள்ள வசதியான பலர் முயன்று வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கடவுச்சீட்டு விநியோகத்தில் மோசடிகள் : அம்பலமான தகவல்கள் | Sri Lanka Vip Passport 60000Rs

கடவுச்சீட்டு மோசடி நாட்டில் பிரபலமான பலர் இலட்சக்கணக்கில் பணத்தை அன்பளிப்பாக கொடுத்து தமது கடவுச்சீட்டுக்களை உடனடியாக பெற்றுக்கொள்வதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரு சிலர் தமது சந்தோஷத்தின் நிமித்தம் சிறிய தொகையிலான பணத்தை அன்பளிப்பாக வழங்கி வருகின்றனர்.

எனினும் பெருந்தொகை பணத்தை கொடுத்து முக்கியஸ்தர்கள் பெற்றுச் செல்கின்றனர். இவ்வாறான நிலையில் இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பாடசாலை மாணவர்களுக்கான கடவுச்சீட்டு விநியோகம்! அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமம்

பாடசாலை மாணவர்களுக்கான கடவுச்சீட்டு விநியோகம்! அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமம்

பிரச்சனைக்கு தீர்வு

இதேவேளை, கடவுச்சீட்டு வழங்குவதில் தற்போது நிலவும் பிரச்சினைகள் இரண்டு மாதங்களுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கடவுச்சீட்டு விநியோகத்தில் மோசடிகள் : அம்பலமான தகவல்கள் | Sri Lanka Vip Passport 60000Rs

குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன் தினசரி வழங்கப்படும் கடவுச்சீட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சில் நேற்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு மூடப்படும் வீதி: சாரதிகளுக்கான அறிவித்தல்

இரண்டு நாட்களுக்கு மூடப்படும் வீதி: சாரதிகளுக்கான அறிவித்தல்

நீர் சுத்திகரிப்பு கலவையில் ஆபத்து விளைவிக்கும் கூறு : நாடாளுமன்றில் தகவல்

நீர் சுத்திகரிப்பு கலவையில் ஆபத்து விளைவிக்கும் கூறு : நாடாளுமன்றில் தகவல்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW