சீரற்ற வானிலையால் மரக்கறிகளின் விலையில் ஏற்படப்போகும் மாற்றம்
Vegetables
Vegetables Price
Vegetable Price Today
By Faarika Faizal
தற்போது இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
மானிங் சந்தை வணிகர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ். எம். உபசேன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், “கடந்த சில நாட்களில் ஏற்பட்ட கடும் மழையால் பல பயிர்ச்செய்கைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதன் விளைவாக, அடுத்த சில வாரங்களில் மரக்கறிகளின் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாதது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வானிலை மாற்றத்தினால் சந்தையில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவும் இதனால் விலை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
You May Like This Video...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |