மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
Ministry of Education
Sri Lankan Peoples
Sri Lankan Schools
Education
schools
By Rakshana MA
நாட்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (18) திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சிங்களம் மற்றும் தமிழ் மொழி பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் கடந்த 7 ஆம் திகதி நிறைவடைந்தன.
இதனைத் தொடர்ந்து, மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.
மூன்றாம் தவணை
இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
[E8YI9
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |