வீழ்ச்சியடையும் நெல்லின் விலை! வெளியான தகவல்
நாட்டில் தற்போது நெல்லின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை ஐக்கிய அரிசி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதன்படி, நெல்லுக்கான விலை 14 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், கடந்த காலங்களில் 2 இலட்சம் கிலோ மெட்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பாதிப்படையும் விவசாயிகள்
அதேவேளை, அவை தற்போது சதோச நிறுவனங்களில் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன என சுட்டிக்காட்டினார்.
மேலும் இதனால், உள்ளூர் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் 200 ரூபாவுக்கும் மேல் அரிசியை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக, ஐக்கிய அரிசி விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |