தேசிய கல்வியியல் கல்லூரி விண்ணப்பங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல்

Ministry of Education Ceylon Teachers Service Union Education
By Dharu Apr 09, 2024 01:59 AM GMT
Dharu

Dharu

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு  மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

தேசிய கல்வியியல் கல்லூரி விண்ணப்பங்கள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவித்தல் | Special Notification Of Ministry Of Education

விண்ணப்பங்களில் திருத்தம்

கடந்த 5 ஆம் திகதி முதல் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், தமது விண்ணப்பங்களில் திருத்தங்களைச் செய்ய வேண்டுமாயின், ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் ஏப்ரல் 17 ஆம் திகதி நள்ளிரவு வரை அதற்கான அவகாசம் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.