அம்பாறையில் நல்லிணக்க விசேட இப்தார் நிகழ்வு (Photos)
அம்பாறை - நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் அரச கரும மொழிகள் திணைக்களத்தின் 150 மணித்தியால சிங்கள மொழி கற்கை நெறியைத் தொடரும் பயிலுனர்கள ஏற்பாடு செய்த நல்லிணக்க விசேட இப்தார் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது.
நேற்றைய தினம் (04.04.2023) நடைபெற்ற இந்நிகழ்வு, பாடநெறியின் பிரதான வளவாளர் ஏ.எச்.நாஸிக் அஹமத் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் உதவி பிரதேச செயலாளர் பி.பிரணவரூபன், நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன், நிதி உதவியாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித் மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
விசேட மார்க்க சொற்பொழிவு
இதன்போது, நோன்பின் மகிமை பற்றிய இப்தார் விசேட மார்க்க சொற்பொழிவை அஷ்ஷெய்க் ஏ.எம். தெளபீக் (நழீமி) நிகழ்த்தியுள்ளார்.
நிகழ்வின் இறுதியில் பாடநெறியை தொடரும் மாணவர்களின் சார்பில் ஏ.எச்.எம்.நிப்றாஸ் நன்றி உரையை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.












