நேரடி வர்த்தகர்களுக்கு அதிவிசேட வர்த்தமானி!
நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தொலைபேசிகள், தளபாடங்கள் மற்றும் காகிதாதிகள் உட்பட பல குறிப்பிட்ட பொருட்களின் விற்பனையில் ஈடுபட்டுள்ள அனைத்து நேரடி வர்த்தகர்களுக்குமான அதிவிசேட வர்த்தமானியொன்றை வெளியிட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் சாந்த நிரியெல்லவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதனூடாக சூரியப்படலம், தொலைபேசி மற்றும் உதிரி பாகங்கள், தளபாடங்கள், துப்புரவு முகவர்கள், காலணிகள், எழுதுபொருட்கள், சமையலறை உபகரணங்கள் மற்றும் பாகங்கள், சுத்திகரிப்பு பொருட்கள், படுக்கை விரிப்புகள், மெத்தைகள், தைக்கப்பட்ட ஆடைகள் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் நேரடி வர்த்தகர்கள் தமது அதிகாரசபையின் கீழ் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நேரடி வர்த்தகர்கள் என்ற வரையறைக்குள், நடமாடு விற்பனை, வாடிக்கையாளர்களைச் சந்தித்து பேரம் பேசுதல், காட்சிப்படுத்தல், விற்பனைக்கான கட்டளையை பெறுதல் மற்றும் அதுசார்ந்த செய்பாடுகளின் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் அடங்குவதாக அந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.