விமானத்துக்குள் வந்த பாம்பு! 11000 அடி உயரத்தில் விமானி செய்தது என்ன
தென்னாப்பிரிக்காவில் உள்நாட்டு தனியார் விமானம் ஒன்றில் ஆபத்தான நச்சுதன்மையுடைய பாம்பு ஒன்று இருந்துள்ளது. “
ருட்லாப் எராஸ்மஸ் (58) என்னும் விமானி புளோம்ஃபோன்டைனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு 4 பயணிகளுடன் விமானத்தில் பறந்து கொண்டிருந்த போது தமது இடுப்பில் எதோ ஊர்வது போல உணர்ந்துள்ளார்.
குளிரூட்டப்பட்ட தண்ணீர் போத்தலில் இருந்து தண்ணீர் கசிவதாக நினைத்த எராஸ்மஸ் சிறிது நேரத்தில் அது 1.5 மீட்டர் மஞ்சள் நிற நாகப் பாம்பு என்பதை உணர்ந்த விமானி பதற்றப்படாமல் பயணிகளிடம் விமானத்தில் பாம்பு இருப்பதை அறிவித்தார்.
விரைவில் விமானத்தை தரையிறக்கப் போவதாகவும் அவர் கூறினார்.
அதிகாரிகளிடம் இருந்து உடனடியாக அனுமதி கிடைத்தவுடன் விமானி விமானத்தை தரையிறக்கினார்.
இருப்பினும் பாம்பு விமானத்தில் இருந்து தப்பித்துவிட்டது. பதற்றப்படாமல் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய எராஸ்மஸ் தென்னாப்பிரிக்காவின் நாயகன் என்று சமூக ஊடகங்களால் பாராட்டப்பட்டு வருகிறார்.
அதிக நச்சுத்தன்மை கொண்ட அந்த பாம்பு கடித்தால் 30 நிமிடங்களில் மரணம் நிச்சயம் என தெரிவிக்கப்படுகின்றது,