ஜனாதிபதி தேர்தல்: சமூக ஊடக கருத்துக்கணிப்பு தொடர்பில் வெளியான தகவல்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 26, 2024 09:57 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு சமூக ஊடகங்கள் ஊடாக நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள் மற்றும் கணக்கெடுப்புகளை நிறுத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த வாரம் கூடவுள்ள ஆணைக்குழு கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிடுகின்றார்.

கருத்துக் கணிப்பு

சமூக வலைதளங்கள் மூலம் கருத்துக்கணிப்பு நடத்தி சில வேட்பாளர்கள் பாரபட்சம் காட்டுவதாகக் கூறும் தலைவர், அதற்கான கருத்துக் கணிப்புகளை யார் நடத்துகிறார்கள் என்பதை கண்டறிய இந்த நாட்களில் ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் கூறுகிறார்.

ஜனாதிபதி தேர்தல்: சமூக ஊடக கருத்துக்கணிப்பு தொடர்பில் வெளியான தகவல் | Social Media Polling Will Be Suspended

அப்போது கருத்துக் கணிப்புகளை நிறுத்தும் முறை குறித்து ஆலோசிக்கப்படும், மின்னணு அல்லது அச்சிடப்பட்ட ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது எளிது, ஆனால் சமூக வலைதளங்கள் மூலம் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளை நிறுத்துவது எளிதான காரியம் அல்ல என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW