முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

Ampara Sri Lankan Peoples Floods In Sri Lanka
By Rakshana MA May 01, 2025 11:25 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் முக்கிய நீர்த்தேக்கங்களின் 6 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது.

பல பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, 24 நீர்த்தேக்கங்களில் நீர் வான் பாய்வதாக, நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்கள் உள்ளிட்ட 6 நீர்த்தேக்கங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்தில் 4 நீர்த்தேக்கங்களிலும் கொள்ளளவை விட நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

உயரும் வெப்பநிலை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உயரும் வெப்பநிலை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வான்கதவுகள் திறப்பு

பதுளை, குருநாகல், மொனராகலை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தலா 2 நீர்த்தேக்கங்களில், நீர் வான் பாய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு | Sluice Gates Of Major Reservoirs In Sri Lanka

இந்த நிலையில், இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகளும், அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மூதூரில் முன்னெடுக்கப்பட்ட மே தின நிகழ்வு

மூதூரில் முன்னெடுக்கப்பட்ட மே தின நிகழ்வு

பாரிய சவாலுக்கு முகங்கொடுக்கும் தொழிலாளர்கள்

பாரிய சவாலுக்கு முகங்கொடுக்கும் தொழிலாளர்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW