இரத்தினபுரி வாக்குச்சாவடியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பார்வையாளர் உயிரிழப்பு

Ratnapura SJB Sri Lanka Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Sivaa Mayuri Sep 21, 2024 12:45 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

Courtesy: Sivaa Mayuri

இரத்தினபுரி, சீவாலி மத்திய கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பார்வையாளராக இருந்த அறுபத்தெட்டு வயதுடைய ஒருவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்..

இந்த சம்பவம் இன்று காலை எட்டு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் ஒய்.ஏ. வன்னியாராச்சி என்ற இரத்தினபுரி புதிய நகரம் ரிஷி சுமனகமவை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு நடவடிக்கை

முன்னதாக அவர் நெஞ்சுவலி காரணமாக உடனடியாக இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி வாக்குச்சாவடியில் ஐக்கிய மக்கள் சக்தியின் பார்வையாளர் உயிரிழப்பு | Sjb Observer Dies At Ratnapura Booth

இந்தநிலையில் அவரது சுகயீனம் வாக்களிப்பு நிலையத்தின் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தவில்லை என இரத்தினபுரி மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.