அதிபர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தயார்: சிவாஜிலிங்கம் அறிவிப்பு

By Fathima Jun 12, 2024 04:42 AM GMT

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதில் சிக்கல் ஏற்பட்டால் நான் சுயேட்சைக்காக போட்டியிடுவேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று (11) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் பொது வேட்பாளர்

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதிபர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தயார்: சிவாஜிலிங்கம் அறிவிப்பு | Shivajilingam Contest President Election Candidate

இம்முறை மக்கள் மத்தியிலும் பொது வேட்பாளர் விடயம் பேசப்படுகிறது. எனவே இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவர் முன்னிறுத்தப்படுவார்.

அதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் நான் சுயேட்சையாக போட்டியிடுவேன் என தெரிவித்தார்.