மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் அறிவிப்பு!

TNA Sri Lanka Politician Sri Lankan Peoples
By H. A. Roshan May 29, 2025 09:00 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

மூதூர் பஜரதேச சபைக்கான தலைவராக செல்வரெத்தினம் பிரகலாதன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

தலைவர் தெரிவு குறித்து நேற்று (28) மாலை கட்சியின் மாவட்ட அலுவலுகத்தில் இடம் பெற்ற வேட்பாளர் கலந்துரையாடலின் போது இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

செல்வரெத்தினம் பிரகலாதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக இம்முறை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சம்பூர் வட்டாரத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை..! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை..! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

எட்டப்பட்ட தீர்மானங்கள் 

இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாவட்டத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் இந்த முடிவினை ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் அறிவிப்பு! | Selvarethinam Pragalathan Elected Ps Chairman

குறித்த கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் க.ச.குகதாசன்,

''உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மூதூர் பிரதேச சபையில் வெற்றிபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினை சேர்ந்தவர்கள் ஐந்து பேரும் ஒன்று கூடி மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவுக்காக ஜனநாயக ரீதியாக செல்வரெத்தினம் பிரகலாதன் என்பவரைப் பரிந்துரை செய்யதுள்ளனர்.

மூதூர் பிரதேச சபைத் தலைவர் தெரிவின் போது ஐந்து உறுப்பினர்களும் முடிவுக்கு ஆதரவாக செயற்படுவார்கள்.''என கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் பறிபோன உயிர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பில் பறிபோன உயிர்கள் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

பிரதேச சபையின் தவிசாளர் 

அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த சபைத் தலைவராக பரிந்துரை செய்யப்பட்ட செல்வரெத்தினம் பிரகலாதன்,

''ஜனநாயக ரீதியாக வாக்கெடுப்பு மூலமாக என்னை தலைவராக பரிந்துரை செய்து தெரிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு எனது வட்டார மக்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் அறிவிப்பு! | Selvarethinam Pragalathan Elected Ps Chairman

அத்துடன் பிரதேச சபையின் தலைவர் தெரிவின் பின்னர் இன, மத பாகுபாடின்றி அபிவிருத்திக்காக சமமான வள பங்கீடு மூலமாக அபிவிருத்தி திட்டங்களை திறம்பட முன்னெடுக்கவும் எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் எனது சேவைக் காலத்தின் போது முன்னெடுப்பேன்.''என கூறியுள்ளார்.  

தம்பலகாமத்தில் இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழிற் சந்தை

தம்பலகாமத்தில் இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும் தொழிற் சந்தை

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   

GalleryGalleryGallery