கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள்
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தூரப் பிரதேசங்களுக்கு புதிதாக நியமனம் பெற்ற ஆங்கில ஆசிரியைகளின் அசெளகரியங்களை கருத்தில் கொண்டு பொருத்தமான இடமாற்றத்தை வழங்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
குறித்த கோரிக்கையானது, நேற்று (27) அம்பாறையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
தகுந்த நடவடிக்கை
இதன்படி, தூரப் பிரதேசங்களுக்கு நியமனம் பெற்ற ஆசிரியைகள் எதிர்கொள்ளும் மொழி மற்றும் பிரயாண அசௌகரியங்கள் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இந்த பிரச்சனைக்கு தகுந்த நடவடிக்கைள் மேற்கொள்ளவுள்ளதாக ஆளுநர் வாக்களித்துள்ளார்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிசாம் காரியப்பர் எம்.எஸ்.உதுமாலெப்பை,மஞ்சுல சுகத் ரத்நாயக, பிரியந்த விஜயரத்ன ஏ.எம்.எம்.ரத்வத்த உட்பட மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எம்.மனாஸிர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

