காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு
Sri Lanka
Eastern Province
By Rakshana MA
மட்டக்களப்பு - காத்தான்குடி கடல் பிரதேசத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு காரணமாக நடுக்கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த பாரிய விசைப்படகு ஒன்று கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளது.
நீண்ட நாட்கள் நடுக்கடலில் தங்கி இருந்து மீன்பிடிக்கின்ற அலியா படகு எனப்படுகின்ற பாரிய படகு இவ்வாறு கொந்தளிப்பு காரணமாக கரைக்கு அடித்து வரப்பட்டுள்ளது.
கடல் கொந்தளிப்பு
நங்கூரமிடப்பட்டிருந்த குறித்த படகு கரைக்கு இழுத்து வரப்பட்டுள்ள நிலையிலும் அதனை இழுத்து கரை சேர்ப்பதில் கடற்றொழிலாளர்கள் பெரும் சிரத்தைகளை எதிர்கொண்டுள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |


