ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Grade 05 Scholarship examination
By Mayuri Sep 14, 2024 07:15 AM GMT
Mayuri

Mayuri

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ள நிலையில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட அறிவிப்பொன்றைப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

பரீட்சைக்குப் பேனா பயன்படுத்தினால் கருப்பு அல்லது நீல நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் வேறு நிறங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பென்சிலை பயன்படுத்த தடையில்லை

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்கள் பென்சிலை பயன்படுத்தினால் அதற்குத் தடையில்லை. எனினும் பென்சிலால் எழுதும் பிள்ளைகள் சில பென்சில்களை எடுத்து வருமாறும் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எழுதவுள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Scolarship In Sri Lanka

பரீட்சை நிலையத்திற்குள் அழிப்பான் மற்றும் தண்ணீர் போத்தல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகின்றது.

மேலும் ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் கோப்பு அட்டைகளைப் பரீட்சை நிலையத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW