திஹாரியில் இலவசமாக உயிரியல் கற்கை..!

Sri Lankan Peoples Education
By H. A. Roshan May 29, 2025 07:21 AM GMT
H. A. Roshan

H. A. Roshan

திஹாரிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் உயர்தரத்திற்கு விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்களும் வைத்தியராக வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் முற்றிலும் இலவசமாக, மாணவர்களுக்கு பகுதிநேர வகுப்புகள் மூலமாக நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கல்லூரியானது மேல் மாகாணம் கம்பஹா மாவட்டத்தில் அமையப் பெற்றுள்ள பிரபல பாடசாலைகளிள் ஒன்றாகவும், சுமார் 123 வருட வரலாற்றை கொண்ட பாடசாலையாகவும் காணப்படுகின்றது.

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை..! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

அதிரடி மாற்றம் கண்ட தங்க விலை..! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

உயர்தர விஞ்ஞானப்பிரிவு

அங்குள்ள பல மாணவர்கள் சாதாரண தரத்தில் நல்ல பெறுபேற்றை பெற்றிருந்தாலும் உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவை தேர்ந்தெடுக்க பொருளாதார சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு நேற்றயை தினம் (28) இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திஹாரியில் இலவசமாக உயிரியல் கற்கை..! | Science Stream In Central College Thihariya

கணக்கெடுப்பின் படி, எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற குறித்த திட்டத்திற்காக மாதம் ஒன்றுக்கு சுமார் 8 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக இந்தத் திட்டம் திஹாறிய அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் ஏ.ஜே.எம்.புர்கானின் வழிகாட்டலில் ESDS என்ற அமைப்பின் மூலமாக நடாத்தப்பட்டு வருகின்றது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம் : வெளியான தகவல்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலவரம் : வெளியான தகவல்

இலவசமான கல்வி 

இதன் தலைவராக அல- அஸ்ஹல் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் பிரபல தொழிலதிபருமான அல்ஹாஜ் இக்ராம் மற்றும் உபதலைவராக ஜனாப் அஸ்மி ஷரப் உள்ளிட்ட பலரும் இத்திட்ட வெற்றிக்கு காரணிகளுள் ஒன்றாக அமைந்துள்ளனர்.

திஹாரியில் இலவசமாக உயிரியல் கற்கை..! | Science Stream In Central College Thihariya

குறித்த நிகழ்வுக்கு மேல் மாகாண ஆளுநர் அல்ஹாஜ் ஹனீப் யூசுப் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முழப்பர் கௌரவ அதிதியாக கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு

தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள் கௌரவிப்பு

மீண்டும் அரிசி தட்டுப்பாடு..வெளியான தகவல்

மீண்டும் அரிசி தட்டுப்பாடு..வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery