9 வயது சிறுவன் கழுத்தில் பட்டி இறுகி பரிதாபமாக உயிரிழப்பு
By Fathima
வீட்டு வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் கழுத்தில் ‘ரபர் பட்டி’ இறுகியதில் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் நேற்று (14.1.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கலவான - பொத்துபிட்டிய பகுதியைச் சேர்ந்த தரம் 3 இல் கல்வி பயிலும் 9 வயது மாணவனே உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
அந்த மாணவன் கம்பியொன்றை ரபர் பட்டியில் சுற்றி அதனைச் சுழற்றி விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இதன்போது கம்பி தலைப் பகுதியில் பட்டுள்ளது.
அதன்பின்னர் ‘ரபர் பட்டி’ கழுத்தில் இறுகி, மாணவன் உயிரிழந்துள்ளார்.என்று
பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.