ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இணைந்தது சவுதி அரேபியா
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சவுதி அரேபியாவும் உறுப்பு நாடாக இணைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக கடந்தாண்டு டிசம்பரில் சீன ஜனாதிபதி ஜிஜிங்பிங்க் சவுதி சென்றிருந்தார்.
இதன்போது எஸ்.சி.ஓ. அமைப்பில் இணைய சவுதி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து சவுதி அரபேிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து எஸ்.சி. ஓ. அமைப்பில் சவுதி அரேபியா இணைந்துள்ளது.
இதன் மூலம் இந்த அமைப்பில் இணைந்துள்ள நாடுகளின் எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு
கடந்த 2001ம் ஆண்டு ஜூன் மாதம் சீனாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த அமைப்பில் இந்தியா, சீனா, பாக்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், கிரியோஜிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன ஆப்கானிஸ்தான் பார்வையாளராக உள்ளது.
இந்நிலையில் சவுதி அரேபியாவும் எஸ்.சி.ஓ. அமைப்பில் உறுப்பு நாடாக இணைந்துள்ளது.