ரமழானை முன்னிட்டு இலங்கை முஸ்லிம்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கியது சவூதி அரேபியா!

Ramadan Sri Lanka Saudi Arabia
By Fathima Mar 31, 2023 11:17 AM GMT
Fathima

Fathima

இலங்கையிலுள்ள வறிய மக்களுக்குப் பகிர்ந்தளிப்பதற்கான உலருணவுப் பொதிகளை சவூதி அரேபியா அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

ஹிஜ்ரி 1444ஆம் ஆண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸினாலேயே இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த உலருணவுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் அல் கஹ்தானியினால் செவ்வாய்க்கிழமை (28) உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ரமழானை முன்னிட்டு இலங்கை முஸ்லிம்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கியது சவூதி அரேபியா! | Saudi Arabia Distributed Dry Food Packs To Muslims

உணவுப் பொதிகள் விநியோகம்

கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் இஸட்.ஏ.எம் பைசல் மற்றும் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம். அன்வர் அலி உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.

இந்த திட்டமானது சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சின் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.

நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் ஊடாக தகுதியான மக்களுக்கு இந்த உணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.