ரமழான் பிறையைப் தேடுமாறு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சவூதி அரேபியா!

Ramadan Saudi Arabia
By Renuka Mar 21, 2023 05:34 AM GMT
Renuka

Renuka

ரமழான் மாதத்தின் பிறையைத் தேடுவதற்கு சவூதி குடிமக்களுக்கு சவூதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த அழைப்பு இன்றைய தினம் (21.03.2023) விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், உச்ச நீதிமன்றம் பிறையை வெற்றுக் கண்ணால் அல்லது தொலைநோக்கி மூலம் பார்ப்பவர்கள் அருகிலுள்ள நீதிமன்றத்தில் புகாரளித்து அதனைப் பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்துள்ளது.

ரமழான் பிறையைப் தேடுமாறு இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள சவூதி அரேபியா! | Saudi Arabia Calls On Muslims

வளைகுடா நாடுகள்

மேலும், பிறையைப் பார்த்த தங்கள் பகுதியில் உள்ள பிராந்திய மையத்தின் ஆணையத்திற்குத் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

வானியல் கணக்கீடுகளின் படி இந்த வருட ரமழான் மாதமானது எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி தொடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து வரும் ஈத் அல் ஃபித்ரானது எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இவை பிறை பார்ப்பதின் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும். சவூதி அரேபியாவைப் பின்பற்றியே மற்ற வளைகுடா நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகள் ரமழானை வரவேற்கும் என்பது குறிப்பிடத்தக்கது.