இரவில் ஜனாதிபதியிடம் அழும் சஜித்
Ranil Wickremesinghe
Sajith Premadasa
By Thahir
காலையில் ஜனாதிபதிக்கு எதிராக வீராப்பாக பேசும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இரவில் ஜனாதிபதிக்கு இரகசியமாக தொலைபேசி அழைப்பு எடுத்து அழும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
பகலில் வீராப்பாக பேசும் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பாதுகாத்துத் தருமாறு கோரி ஜனாதிபதியிடம் அழுவது மிக வேடிக்கையான சம்பவம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.