திருமணம் குறித்து இஸ்லாம் கூறும் ஒழுங்குகள்!

Marriage
By Fathima Apr 11, 2023 02:16 PM GMT
Fathima

Fathima

ஒரு பெண் தானாக தன் திருமணத்தை நடத்திக் கொள்ள இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாறாக அவளது பூரண சம்மதத்துடன் அவளது பெற்றோர் தான் நடத்தி வைக்க வேண்டும். 

(அல்லாஹ்வுக்கு) இணை வைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்.

திருமணம் குறித்து இஸ்லாம் கூறும் ஒழுங்குகள்! | Rules Of Marriage In Islam

ஆண்கள் நம்பிக்கை 

அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்; இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்
(அல்குர்ஆன் : 2:221) 

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களை மணக்காதீர்கள் என்று 2:221 வசனத்தில் ஆண்களுக்குக் கட்டளையிடும் இறைவன் இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள் என்று அதே வசனத்தில் கூறுகிறான்.

பெண்களுக்கு அவர்களின் பெற்றோர் பொறுப்பாளர்கள் தான் முன்னின்று திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம். 

திருமணம் குறித்து இஸ்லாம் கூறும் ஒழுங்குகள்! | Rules Of Marriage In Islam

திருமணம் செல்லாது 

அடிமை பெண்களை குடும்பத்தார் அனுமதியுடன் அவர்களை மணந்து கொள்ளுங்கள். (திருக்குர்ஆன் 4:25) 

இந்த வசனமும் ஒரு பெண் தானாக மணமுடித்துக் கொள்வதைத் தடை செய்கிறது.

அபு மூஸா (ரலி) அறிவிக்கிறார் : வலி (பெற்றோர் அல்லது பாதுகாவலர்) அனுமதி இன்றி முடிக்கும் திருமணம் திருமணமே ‌ஆகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத் 2085 திர்மிதீ 1101 

ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார் : எந்த பெண் ‌பெற்றோர் அல்லது பாதுகாவலர் அனுமதி இன்றி திருமணம் முடிக்கிறாளோ அந்த திருமணம் செல்லாது அந்த திருமணம் செல்லாது அந்த திருமணம் செல்லாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
திர்மிதீ 1102 அபூதாவூத் 2083

திருமணம் குறித்து இஸ்லாம் கூறும் ஒழுங்குகள்! | Rules Of Marriage In Islam

உறவு

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு பெண் பெற்றோர் அனுமதி இன்றி ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டால் அது திருமணமாகாது அது முஸ்லிம் ஆணாக இருந்தாலும் சரி பிற மதத்தைச் சேர்ந்த ஆணாக இருந்தாலும் சரி.. 

திருமணமே இல்லை என்று ஆகிவிட்ட பிறகு அவர்கள் இருவரும் உறவு கொள்வதற்குப் பெயர்.