புத்தளத்தில் பதிவாகியுள்ள கொள்ளை சம்பவம்: தீவிர விசாரணை முன்னெடுப்பு

Puttalam
By Mayuri Sep 15, 2024 08:18 AM GMT
Mayuri

Mayuri

புத்தளம் - மஹாவெவ பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் துப்பாக்கியை காட்டி இன்று (15) அதிகாலை இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு இன்று (15) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வருகை தந்த நபர் ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளரிடம் கைத்துப்பாக்கியை காண்பித்து சுமார் 207,500 ரூபாவை கொள்ளைடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸில் முறைப்பாடு பதிவு

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் தொடுவாவ பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

புத்தளத்தில் பதிவாகியுள்ள கொள்ளை சம்பவம்: தீவிர விசாரணை முன்னெடுப்பு | Robbery At Gunpoint In Puttalam

குறித்த முறைப்பாட்டினை அடுத்து, கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் எரிபொருள் நிரப்பு நிலையம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள வர்த்த நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சீ.சீ.டி.வி கமராக்களை பரிசோதனை செய்து, சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தொடுவாவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW