நாட்டு அரசியலில் நவீன மாற்றம் ஏற்படப்போகிறது! ரிஷாட் பதியுதீன்

Risad Badhiutheen
By Mayuri Sep 14, 2024 11:16 AM GMT
Mayuri

Mayuri

அரசியலில் நவீன மாற்றத்துக்கான அடையாளமாக முசலி பிரதேச சபை கருதப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மன்னார், அளக்கட்டு - பொற்கேணியில் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், நாட்டு அரசியலில் நவீன மாற்றம் ஏற்படப்போகிறது. இந்த மாற்றத்துக்கான அடையாளமாக முசலி பிரதேச சபை கருதப்படும். அந்தளவுக்கு இப்பிரதேச தாய்மார்கள் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கின்றனர்.

வழங்கப்பட்டுள்ள உறுதி

எனவே, இம்மாதம் 22இல் ஏற்படவுள்ள ஆட்சி மாற்றத்துக்கு அத்திவாரமிட்ட பெருமை இந்தப் பிரதேசத்து தாய்மார்களுக்கே கிடைக்கும். ஏழைத் தாய்மார்களின் பசியை உணர்ந்தவர் சஜித் பிரேமதாச.

நாட்டு அரசியலில் நவீன மாற்றம் ஏற்படப்போகிறது! ரிஷாட் பதியுதீன் | Rizad Badhiudheen Statement

இவரது தந்தைதான் வறுமையை ஒழிப்பதற்கு "ஜனசவிய" திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர். தான் ஆட்சிக்கு வந்தால் ஏழைத் தாய்மார்களுக்கு மாதாந்தம் இருபதாயிரம் ரூபாவை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இதுபோன்ற நல்ல நிகழ்ச்சித் திட்டங்கள் சஜித் பிரேமதாசவிடம் உள்ளன என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW