எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Sri Lanka Fuel Crisis Fuel Price In World National Fuel Pass
By Fathima Apr 06, 2023 06:14 AM GMT
Fathima

Fathima

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெட்ரோலியம் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள் பெற காசோலைகள் மூலம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், எரிபொருள் பெற பணமாக மட்டுமே வழங்கப்படும் என அதன் நிதித் திணைக்கள தலைவர் ஒருவர் அறிவித்துள்ளமையே இதற்கான காரணம் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. 

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் | Risk Of Fuel Shortage

எரிபொருள் ஒதுக்கீடு

எனவே இதன் காரணமாக நேற்று (05) பல எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள முடியவில்லை என கனிய எண்ணெய் விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

போயா தினமான நேற்றைய தினம் வங்கிகள் மூடப்பட்டுள்ளதால் பணம் பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் | Risk Of Fuel Shortage

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்தும் மக்கள் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு வருவதால் எரிபொருள் விநியோகம் தடைபடுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பண்டிகைக் காலத்தில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டால், நுகர்வோர் கடும் சிரமங்களை சந்திக்க நேரிடும் என பெற்றோலிய பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.