ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்: அப்துல்லாஹ் மஹ்ரூப்

Srilanka Muslim Congress Ranil Wickremesinghe Rauf Hakeem Risad Badhiutheen UNP
By Laksi Oct 05, 2024 09:35 AM GMT
Laksi

Laksi

இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர் என முன்னாள் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் அப்துல்லாஹ் மஹ்ரூப் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் எம்.பிகள் தம் இனத்துக்கு மாத்திரமே சேவை செய்வார்கள்: பத்தரமுல்ல சீலரத்ன தேரரின் குற்றச்சாட்டு

முஸ்லிம் எம்.பிகள் தம் இனத்துக்கு மாத்திரமே சேவை செய்வார்கள்: பத்தரமுல்ல சீலரத்ன தேரரின் குற்றச்சாட்டு

ரணில் பிரதமராகலாம்

அவர் மேலும் தெரிவிக்கையில், சிறந்ததொரு தலைவனுக்கான உதாரணமாக ரணில் விக்ரமசிங்க விளங்குகிறார் முஸ்லிம் சமூகத்துக்காக குரல் கொடுத்தவர் இவரே.

ரிஷாட், ஹக்கீம் ஆகியோர் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்: அப்துல்லாஹ் மஹ்ரூப் | Rishad And Hakeem Are Deceiving Muslim Community

ரிசாட் பதியுதீன் சிறையில் அடைக்கப்பட்ட போதும் கூட நாடாளுமன்றில் குரல் கொடுத்தவர் எனவே தான் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ரிசாட் , ஹக்கீம் போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி வருகின்றனர்.

அநுர குமாரவுடன் இணைந்து எதிர்காலத்தில் தேசிய அரசாங்கம் ஊடாக ஆட்சி அமைந்தால் ரணில் விக்ரமசிங்கவே பிரதமராகலாம் என்றார்.

ஐஎம்எப் உடன் வெற்றிகரமாக நிறைவுபெற்ற பேச்சுவார்த்தை: நிதியமைச்சு

ஐஎம்எப் உடன் வெற்றிகரமாக நிறைவுபெற்ற பேச்சுவார்த்தை: நிதியமைச்சு

வேட்பு மனுத்தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

வேட்பு மனுத்தாக்கல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW