அரசாங்கம் இலவசமாக கொடுக்கும் அரிசிக்கு அறவிடப்படும் பணம்:பொதுமக்கள் விசனம்
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Government
By Fathima
சமுர்த்தி ஊடாக அரசாங்கம் இலவசமாக கொடுக்கும் 20 கிலோ அரிசிக்கு பயனாளர் ஒருவரிடமிருந்து 320 ரூபாய் பணம் அறவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுமக்கள் விசனம்
சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் இது தொடர்பில் வினவும் போது அரிசியைக் கொண்டுவரும் வாகனத்திற்குரிய கட்டணமாக 320 ரூபாய் பணம் அறவிடப்படுவதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஒரு கிராம சேவகர் பிரிவில் 300 சமுர்த்தி பயனாளர்கள் இருக்கிறார்கள் என்றால் 320×300= 96000 ரூபாய்.கொழும்பில் இருந்து நேரடியாக 300 அரிசி மூட்டையை கொண்டுவருவதற்கு கூட இவ்வளவு பணம் செலவாகாது என கூறி பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.